#BREAKING | “கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது” பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் தலைவராக இருந்த நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்!
பாஜக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜனமா செய்வதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல் குமார் அறிவித்திருந்தார். மேலும் தமிழக பாஜக தலைமை மீது கடமையாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார்.
அதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.
தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் “மனநலம் குன்றிய” மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.
அன்பு சகோதரர் திரு @CTR_Nirmalkumar அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும். https://t.co/AyLkuMHn7e
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2023
2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?
இந்த நிலையில் அண்ணாமலை நிர்மல் குமார் அறிக்கைகக்கு பதில் அளித்து உள்ளார். அதில் அன்பு சகோதரர் திரு நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும் CTR நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி தலைமையில் இணைந்துள்ளார். மேலும் இது குறித்து அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில் “கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது; 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது
கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய எடப்பாடிக்கு வாக்காளர்கள் பாடத்தை புகட்டியுள்ளனர்” பாஜக-வை சேர்ந்த நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.