CAA Website : CAA விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள்,
சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது.
இதையும் படிங்க : CAA சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் – வைகோ கண்டனம்!
அதாவது, மத அடிப்படையிலான துன்புறுத்தல் அல்லது மத அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்த பயம் காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்த இந்துக்கள்,
சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு, இந்த சட்ட விதிகள் உதவுகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததால் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
ஆனாலும், CAA சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி,
மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது, இந்த சட்ட விதிகளின் கீழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக CAA Website : https:/indiancitizenshiponline.nic.in என்ற தனி இணையதளத்தையும் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க : தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார்!
இந்த இணையதளத்தில் , கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள்,
பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் குடியுரிமை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘CAA-2019’ என்ற மொபைல் செயலியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.