முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச்சடங்கு

chopper-crash-gen-bipin-rawat-last-rites-today
chopper crash gen bipin rawat last rites today

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சூலூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து நேற்றுக் காலை மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் இறந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

chopper-crash-gen-bipin-rawat-last-rites-today
chopper crash gen bipin rawat last rites today

இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கன்டோண்ட்மென்ட் மயானத்திற்கு இன்று பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

Total
0
Shares
Related Posts