பாடகி சுசித்ரா 24 மணி நேரமும் கஞ்சா, கோக்கைன்,உள்ளிட்ட போதை பொருளுடன் தான் இருப்பதாக முன்னாள் கணவர் கார்த்திக் குமார் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் பயில்வான் ரங்கநாதன், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியும் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் twitter பக்கத்தில் தன்னை கலங்க படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், அது மட்டும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதன் குறைந்தது ஆறு மாசத்துக்கு ஒரு முறையாவது என்னுடைய பெயரை அவருடைய வீடியோக்கள்ல சொல்லி வந்தார். இது தனக்கு ரொம்பவே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் பயில்வான் ரங்கநாதனுக்கு கார்த்திக் குமாரும், தனுஷும் பணம் கொடுத்து தான் பேச சொல்லியதாக பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்து இருந்தார்.இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன நேரில் பார்த்தா சுட்டு கொன்னுடுவேன். இல்ல கத்தியால குத்தி கொலை பண்ணிடுவேன்.தனுஷ் ஒரு பூமரு.. மெச்சூரிட்டியே கிடையாது அவனுக்கு..
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/image-265.png?resize=800%2C401&ssl=1)
ஆனா, அவன் ஒரு நல்ல அப்பா.. ஆனா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படி கிடையாது . தொடர்ந்து அந்த நேர்காணளில் திரிஷா , கமல்ஹாசன் , நடிகை சுகாசனி , நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா என திரை துறையில் உள்ள முக்கிய பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு அடுக்கடுக்கான கேள்விகளையும் பகிர் தகவல்களையும் சுசித்ரா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாடகி சுசித்ரா 24 மணி நேரமும் கஞ்சா, கோக்கைன்,உள்ளிட்ட போதை பொருளுடன் தான் இருப்பதாக முன்னாள் கணவர் கார்த்திக் குமார் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் தனது சுச்சி லீக்ஸ் என்ற youtube சேனலை பிரபல படுத்த இது போன்ற செயல்களை செய்வதாக தெரிவித்தார்.சுசித்ரா மன நோயாளி என தெரிவித்தார்.
இது தொடர்பாக நமது i tamil News வலைதளத்திற்கு யூடியூபர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்.
LINK 👉: