ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த தொடர் கனமழையால் குளம், ஏரி நிரம்பியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
தொடர் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழை வெள்ளம் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பொது மக்களை அச்சுறுத்திய ஃபெஞ்சல் புயல் : சென்னையில் மீட்பு பணிகள்!!
இந்த சூழலில், ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரெயில் இன்று விழுப்புரத்தில் இருந்தே புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதில்,
“சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11.55-க்கும் புறப்படும்.
அதைபோல சென்னையில் இருந்து கொல்லம், ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில்களும் இன்று ஒருமணி தாமதமாக புறப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.