DMK Secret Survey : வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகளும் இன்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,
கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகவே கருதப்படும் கோவையில் இம்முறை திமுகவே நேரடியாக போட்டியில் இறங்கும் என வெளியாகும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கின்றனர் கொங்கு மண்டல உடன் பிறப்புகள் (DMK Secret Survey).
கடந்த 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த எந்த மக்களவை தேர்தலிலும் திமுக கோவையில் நேரடியாக களமிறங்காத நிலையில், இந்த தேர்தலில் மட்டும் கோவைக்கு திமுக முக்கியத்துவம் கொடுக்க அப்படி என்ன தான் காரணம்?
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியானது திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட நடராஜன் பாஜக வேட்பாளரான, சிபி. ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த முறை, அதே கோவை மக்களவை தொகுதியானது திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டு வந்த நேரத்தில்,
கோவை கள நிலவரம் குறித்து வந்த சீக்ரெட் தகவல்கள்தான் அறிவாலய வட்டாரத்தின் முடிவை மாற்றியதாக சொல்கிறார்கள் உள் விவகாரம் அறிந்த சிலர்.
அதாவது, “பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என கூறி வந்தார் அண்ணாமலை.
ஆனால், பாஜக சார்பாக போட்டியிட விரும்புபவர்களின் வேட்பாளர்களின் பட்டியலோடு கடந்த வாரம் டெல்லி சென்ற அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே, அண்ணாமலை கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருப்பதால் அங்குள்ள எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்பது குறித்து உளவுத்துறையின் மூலம் ரகசிய சர்வே DMK Secret Survey ஒன்று நடத்தப்பதாகவும்,
திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட அந்த சர்வேயில் கோவையில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என ரிப்போர்ட் வந்த்தாகவும் கூறப்படுகிறது.
தவிர, கோவையை பொறுத்த வரை கட்சியும் ஓரளவு எழுச்சியாக இருப்பதால், கூட்டிக் கழித்துப் பார்த்து தற்போது கோவையில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம் அண்ணாமலை.
இந்த தகவல் அறிவாலய தலைமைக்கு சென்ற பிறகு தான், கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்தால் எதையும் உறுதியாக நம்ப முடியாது என்பதால், திமுகவே நேரடியாக களமிறங்குவது என முடிவெடுக்கப் பட்டதாம்.
தற்போதைய நிலவரப்படி, திமுக-வில் மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார்,
ஐ.டி விங் மாநில இணைச்செயலாளர் டாக்டர். மகேந்திரன் ஆகியோர் கோவைக்கு விருப்பமனு கொடுத்துள்ள நிலையில், “யாரை நிறுத்தினால் அதிக மக்கள் ஆதரவு இருக்கும்?” என்ற ரகசிய சர்வேயை முடுக்கி விட்டதாம் திமுக.
தற்போது, திமுக முக்கியப் புள்ளியின் மேசையில் இருக்கும் அந்த ரகசிய ரிப்போர்ட்டின் படி, ஏற்கனவே கோவை தொகுதிக்கு நங்கு அறிமுகமானவராகவும்,
ஏற்கனவே தேர்தலில் நின்ற அனுபவம் உள்ளவராகவும் இருக்கும் ஒருவருக்கே போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் விருப்பமனு அளித்தவர்களில் முதலிடத்தில் இருப்பது அந்த டாக்டர் தானாம்..!