குஜராத்தில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் காந்திகம் அருகே கடற்கரை பகுதியில் போதைபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
அந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மாநில காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க : மெரினாவில் 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது – த.வெ.க தலைவர் விஜய்!!
அப்போது, அங்கு 10 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கொக்கைன் போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 120 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.