அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்ட செய்தியில் அனைவரும் மும்முரமாக உள்ள நிலையில் மணிப்பூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட கலவரத்தால் 100-1000 பேர் உயிரிழந்தனர் ஆனால் செய்தி யாருக்கும் தெரியவில்லை என்று நடிகையும் முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து,குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்று கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் மணிப்பூரில் தற்போது கலவரங்கள் சற்று குறைந்துள்ளது.ஏழு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலவரத்தில் சோ, குக்கி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 87 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால், கலவர சூழல் காரணமாக இறந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் பிணவறையிலேயே வைக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த சடலங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பலத்த பாதுகாப்போடு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்ட செய்தியில் அனைவரும் மும்முரமாக உள்ளனர். ஆனால் வெகுஜனக் கொலைகள் வெகுஜன அடக்கம் மற்றும் ஒரு மணிப்பூர் மாநிலம் பாதிக்கப்படுகிறது. மனிதநேயத்தை நினைத்து யாரும் வலியை உணர்ந்து அழுவதில்லை.
மக்களின் சம்பவத்தின் முக்கியத்துவம், செய்தி சேனல்களின் சம்பவத்தின் முக்கியத்துவம் மாறிவிட்டது. உலகம் தனிநபர் சார்ந்தது அல்ல. ஒருவர் குற்றம் செய்திருந்தால், சட்டம் பார்த்துக்கொள்ளும். ஆனால் இதை பார், 40 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மடல் விருபக்ஷப்பாவின் மகனை கர்நாடக லோக்ஆயுக்தா கையும் களவுமாக பிடித்தது.
பின்னர் எம்எல்ஏ வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.2 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. லோக்ஆயுக்தா ரெய்டுக்கு அனுமதி பெறாததால், முழு வழக்கையும் இன்று உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டுமே இது போன்ற மாயாஜாலத்தைப் பெறுகிறார்கள். ஆனால் மணிப்பூருக்கு யார் பதில் சொல்வது?
இயற்கை பேரிடர் காரணமாக தமிழகத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் மிகக் குறைவு, ஆனால் மணிப்பூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட கலவரம் பலரைக் கொன்றது. 100-1000 பேர் உயிரிழந்தனர் ஆனால் செய்தி தெரியவில்லை. வருத்தம். நாம் சார்ந்த பொருட்களை இழந்தாலும், நாம் எப்போதும் திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் கலவரங்களால் இழந்த உயிர் மீண்டும் வாழ்வு பெற முடியாது. இது பயங்கர கலவரம் என்று குறிப்பிட்டுள்ளார்.