karumariamman-மனிதன் என்றுமே தனித்து வாழ முடியாது. இதற்காக தான் திருமணம், குடும்பம் போன்றவை நமது சமுதாயத்தில் ஏற்படுத்த பட்டன.
நமக்கு இறுதிவரை துணையிருப்பது நமது குடும்பம் தான். சிலருக்கு பல காரணங்களால் அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமே பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு உடல் மனரீதியான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன்.
புராணங்களின் படி சிவனில் பாதியாகிய சக்தி உலகில் அதர்மங்கள் எல்லை மீறி சென்ற சமயம், அவற்றை அழித்து தர்மத்தை நிலைநாட்டச் செய்வதற்காக இப்பூமியில் கருமாரியம்மனாக பிறப்பெடுத்தாள்.
இதையும் படிங்க: Thiruvenkadu-”மாயமான அம்மன் தாலிச் சங்கலி..” திருவேற்காட்டில் நடந்தது என்ன?
அப்போது தன்னை உளமார பிராத்திப்பவர்களுக்கு நன்மைகள் அனைத்தையும் வழங்குவேன் என்றும், தீயவர்கள் அனைவரையும் அவர்களின் வினைகளுக்கு ஏற்றவாறு தண்டிப்பேன் என வாக்களித்தாள்.
யாரெல்லாம் ஸ்ரீ கருமாரியம்மனை உபாசிக்கிறார்களோ அவர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட துன்ப நிலைகளும் ஏற்படாது என்பது ஆன்றோர்களின் வாக்காகும்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1756306178630627345?s=20
கருமாரியம்மன்(karumariamman) தலவரலாறு:
மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். க – கலைமகள்; ரு – ருத்ரி; மா – திருமகள்; ரி – ரீங்காரி (நாத வடிவானவள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது தலவரலாறு.
தினமும் துதிக்க வேண்டிய கருமாரியம்மன் துதி :
- நெஞ்சத்தில் குடிபுகுந்தாய் எங்கள் கருமாரி
- நின்பாதம் சரணடைந்ததோம் எங்கள் கருமாரி
- தஞ்சமென்று வந்து விட்டோம் எங்கள் கருமாரி
- தயவுடனே காத்திடுவாய் எங்கள் கருமாரி
- வஞ்சகரை மாய்த்திடுவாய் எங்கள் கருமாரி
- வந்தவினை தீர்த்திடுவாய் எங்கள் கருமாரி
- மஞ்சள் பூசி மகிழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
- மங்கலமாய் வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
- துணையிருந்து காத்திருப்பாள் எங்கள் கருமாரி
- துன்பமெல்லாம் போக்கிடுவாள் எங்கள் கருமாரி
- பிணியகற்றும் தெய்வமகள் எங்கள் கருமாரி
- பெயர் விளங்க செய்திடுவாள் எங்கள் கருமாரி
- அணையாத ஜோதியவள் எங்கள் கருமாரி
- ஆதி பராசக்தியவாள் எங்கள் கருமாரி
- இணையில்லா சக்தியவள் எங்கள் கருமாரி
- எங்கள் குறை தீர்த்திடுவாள் எங்கள் கருமாரி
- வேற்காடு வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
- வீரனுக்கு அன்னையவள் எங்கள் கருமாரி
- பொற்பாதம் பணியவந்தோம் எங்கள் கருமாரி
- பொங்குபுகழ் கொண்டவளாம் எங்கள் கருமாரி
- நாற்கவியும் பொழிந்துன்னை எங்கள் கருமாரி
- நாவார வாழ்த்திடுவோம் எங்கள் கருமாரி
- பாற்கடலாய் நின்கருணை எங்கள் கருமாரி
- பரவுதம்மா நின்பெருமை எங்கள் கருமாரி
- நிலம் வாழ வந்தவளாம் எங்கள் கருமாரி
- குலம் தழைக்கச் செய்திடுவாள் எங்கள் கருமாரி
- கூறுவினை தீர்ப்பவளாம் எங்கள் கருமாரி
- நலம் கொடுக்கும் நாயகியாம் எங்கள் கருமாரி
- நல்வழி சேர்ப்பவளாம் எங்கள் கருமாரி
- சலங்கையொலி கேட்டிடவே எங்கள் கருமாரி
- தயவுடனே வந்திடுவாள் எங்கள் கருமாரி
- எங்கள் கருமாரி அவள் எங்கள் கருமாரி.