மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்து மாடியிலிருந்து தள்ளிவிட்டு, தவறிவிழுந்ததாக கூறி நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமங்கலம் அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்த கணபதிராஜா என்பவர் நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார்.
இந்நிலையில் கணபதிராஜாவின் மனைவி நாகலெட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 8 மணியளவில் வீட்டு மாடியில் துணிகளை காயப்போட சென்றபோது தவறி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் பெண்ணை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வில்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையே உயிரிழந்த கர்ப்பணி பெண்ணான நாகலட்சுமியின் சகோதரர் வைரம் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார், கணவர் கணபதி ராஜாவிடம் மேற்கொண்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக தன்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.