சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு கொடுக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மதிப்பு மிக்க இடமான வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார்.
Also Read : குறுநில மன்னர்களாக செயல்படும் திமுக அமைச்சர்கள் – ஈபிஎஸ் விமர்சனம்
போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவை புறக்கணித்தும் ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்
இந்நிலையில் ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் . சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு கொடுக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.