Ujjain temple fire- உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-144415.png?resize=499%2C339&ssl=1)
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-144030.png?resize=581%2C281&ssl=1)
அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்தார்.மேலும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-143936.png?resize=508%2C339&ssl=1)
‘குலால்’ சமய விழாவின் ஒரு பகுதியாக ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணப் பொடி வீசப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உஜ்ஜைனில் சிவனை வணங்கிய பிரதமர்… வைரலாகும் புகைப்படம்!
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-143958.png?resize=764%2C501&ssl=1)
இச்சம்பவத்தால் உஜ்ஜைனில் பரபரப்பு காணப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-144012.png?resize=813%2C408&ssl=1)
இதையும் படிங்க: பிரதமர் திறந்து வைத்த 6 மாதத்தில்.. சிலைகளுக்கு வந்த சோதனை!
இதனிடையே காயமடைந்து இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-25-143947.png?resize=729%2C423&ssl=1)
மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.