Vadakalai Thenkalai Issue : காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்:
முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.
இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.[1] இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க :https://itamiltv.com/admit-card-for-khelo-india-competition-competition/
வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.
அந்த வகையில் , இந்தாண்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத்,
வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
அப்போது வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் , ஆராதனைகள், செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது .
இதனையடுத்து சுவாமி வீதியுலாவின்போது வரதராஜபெருமாள் கோயில் அருகே வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1747849018481463322?s=20
அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென மாறி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர்.
இதனால் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரல் ஆகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவவத்தின் போது வேதபாராயணம் செய்வதில் வடகலை மற்றும் தென்கலை (Vadakalai Thenkalai Issue) பிரிவினரிடையே சலசலப்பு ஏற்பட்டு,
பெருமாளுக்கு படைக்கப்பட்ட தோசை, வடையை யாருக்கு தருவது என்பதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.