அரவக்குறிச்சியில்(aravakurichi) 18 ஆடுகள் கொத்து கொத்தாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி(aravakurichi) ஜீவா நகர் பகுதியில் வசித்து வரும் சாரதாம்பாள் என்ற மூதாட்டி 40திற்கும் மேற்பட்ட ஆடுககளை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று இரவு 35 செம்மறி ஆடுகள் மற்றும் ஐந்து செம்மறியாடு குட்டிகளை பட்டியில் அடைத்துவிட்டு மூதாட்டி வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதனையடுத்து இன்று அதிகாலை பட்டியில் உள்ள 18 செம்மறி ஆடுகள், மற்றும் ஒரு சேவல் ஆகியவை மர்மமான உயிரிழந்துள்ளது. மேலும் 7 செம்மறி ஆடுகள் காயம் அடைந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி சாரதாம்பாள் கால்நடை மருத்துவரை அழைத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள் சோதனை செய்ததில் விலங்கு கடித்ததில் 18 செம்மறி ஆடுகள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
உயிரிழந்த 18 செம்மறி ஆடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.