மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாகி உள்ளதை அடுத்து (Mayiladuthurai) பொதுமக்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மயிலாடுதுறை பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில் சிறுத்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திடுமோ என்ற பயத்தில் இரவி நடமாடுவதை மக்கள் தவிர்த்து வருகின்ற்னர்.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்கும் படி காமவள் துறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் . சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இதுமட்டுமின்றி மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைத் தேடும் பணியில் (Mayiladuthurai) தீயணைப்பு, வனத்துறை, காவலர்கள் என 50 பேர் கொண்ட குழு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது.
மேலும் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.