ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தாலுவாய் கிராம வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, ( Voting machine breaking ) வாக்குப்பதிவு எந்திரத்தை கீழே தூக்கி வீசி உடைத்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .
தமிழகம் மற்றும் புதுசேரியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது . இதையடுத்து கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
பின்னர் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, உத்தரப் பிரதேசம்,உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது.
Also Read : முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்..!!
இதையடுத்து இன்று ஆந்திரா- 25, தெலங்கானா – 17, பீகார் 5, ஜம்மு -1, ம.பி. 8, மகாராஷ்டிரா 11, ஒடிசா 4, உ.பி. 13, மே.வங்கம் 8, ஜார்க்கண்ட் 4 தொகுதிகள் உட்பட 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தாலுவாய் கிராம வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்குப்பதிவு எந்திரத்தை கீழே தூக்கி வீசி உடைத்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .
வாக்கு பதிவின் போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அந்த நபர் வன்முறையில் இறங்கியதால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து அந்நபரை பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் தீவிர ( Voting machine breaking ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.