Maldives : பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் ,மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது.
அப்போது லட்சத்தீவு கடற்கரையில் ஸ்நோர்கெல்லிங் செய்வது போன்று எடுக்கப்பட்ட படங்களை தனது x பக்கத்தில் வெளியிட்டு,
லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன்.
மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை உள்ளது .இந்த தீவு இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அமையும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.இந்த படங்கள் இணையத்தில் வைரலானது.
ALSO READ:https://itamiltv.com/somnath-said-that-indians-will-definitely-fly-in-space-by-2025/
இந்த நிலையில், பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு(maldives) அமைச்சர்கள் சிலர் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவின் துணை அமைச்சர் மரியம் ஷியுனா ட்விட்டர் பதிவு:பிரதமர் நரேந்திர மோடியை “கோமாளி” என்றும், “பொம்மலாட்ட பொம்மை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மாலத்தீவின் எம்.பி. ஜாஹித் ரமீஸ் ட்விட்டர் பதிவு :“இந்த நடவடிக்கை சிறப்பானது. ஆனால், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்களால் எப்படி வழங்க முடியும்? அவர்கள் எப்படி சுத்தமாக வைத்திருப்பார்கள்? அறைகளில் இருந்து வரும் நாற்றம் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.”
என்று ஜாஹித் ரமீஸ் பதிவிட்டி இருந்தார்.
ALSO READ :https://x.com/ITamilTVNews/status/1744262413816635534?s=20
மாலத்தீவு அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக மாலத்தீவு நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால்,மாலத்தீவு(maldives)அரசாங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்று மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.