எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த் சாமியின் (MGR or Arvind Samy) படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில்தான் இன்றைய அதிமுக உள்ளது என திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நடந்த திமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலன்கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த் சாமியின் படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில்தான் இன்றைய அதிமுக உள்ளது
ஆளும்கட்சியாக பொறுப்புக்கு வந்த பின்னர் சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் இது. 2024 தேர்தல் முடிவுகள் 2026 தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே 40 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற வேண்டும்”
அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தான் நான் அப்போதே கூறினேன்.
என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை, நான் சின்னவர் தான் உங்களை விட வயதில் சின்னவர்.
வாழும் பெரியார், இளைய கலைஞர் என்று கூப்பிடுகிறீர்கள், ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் அதுதான் நிரந்தரம், தயவு செய்து பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
EPS சிறைக்கு செல்வார், OPS சிறைக்கு செல்வார் என இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். நான் சொல்கிறேன் இருவருமே சிறைக்கு செல்வார்கள். அப்படி சிறைக்கு செல்ல நேர்ந்தால் இருவரும் தவழ்ந்து செல்லக்கூடாது.
அரசின் திட்டங்களை வாக்குகள் ஆக்குகிற கழகத்தின் இரத்த நாளங்களான பாக நிலை முகவர்கள் மக்களவைத் தேர்தலுக்கான களப்பணியை இப்போதே தொடங்கிட வேண்டும்.
மாநில உரிமைகளை மீட்கவும் – மத சார்பின்மையை காக்கவும் இந்தியா கூட்டணியின் வெற்றி ஒன்றே இலக்கு என்று செயல்பட வேண்டும்
Also Read :https://itamiltv.com/dmk-coordinating-committee-chief-minister-m-k-stalin-conference/
(MGR or Arvind Samy) தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தி.மு.கவின் கொள்கை.
நீங்கள் கோவில் கட்டினால் மக்கள் வந்து வழிபாடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உதயசூரியனுக்குதான் வாக்களிப்பார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.