என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் தள்ளி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 பாதுகாப்பு வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதற்காக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது. மீண்டும் 8.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 3வது முறையாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், திட்டமிட்டப்படி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை