மத்தியப் பிரதேசத்தில்(madhya-pradesh) உள்ள இந்தூரில் சாமியார்(samiyar) ஒருவர் திருமண பொருத்தம் இல்லையனே செய்த சடங்குகளை தவறான முறையில் செய்ததால் பூசாரியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் (rajeshtan)கோட்டாவைச் பகுதியை சேர்ந்த 60 வயதான கோவில் பூசாரி குஞ்ச்பிஹாரி ஷர்மா, அதே பகுதியில் வசிக்கும் லக்ஷ்மிகாந்த் சர்மாவால் என்பவர் தனது மகன் அருணுக்கு மணமகள் கிடைக்காததால் திருமணத்திற்காக சத்தியநாராயணன் பூஜையை நடத்த அழைத்தார்.
இந்த நிலையில் லக்ஷ்மிகாந்த் சர்மாவால் என்பவர் தனது மகனின் திருமணத்திற்காக சத்தியநாராயணன் பூஜையை நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டில் சத்யநாராயண பூஜையை நடத்த செப்டம்பர் 29-ம் தேதி அவர்களது வீட்டுக்குச் சென்று பூஜை நடத்தினார். அவர்கள் அவருக்கு உணவும் பாலும் கொடுத்தனர்.
இந்த நிலையில் இரவில், லக்ஷ்மிகாந்தின் இளைய மகன் விபுல், பூசாரியை எழுப்பி, அவனுடைய பூஜை தவறாகிவிட்டது என்றும், அவனுடைய சகோதரர் வினோதமாகச் செயல்படுவதாகவும் கூறி அவனுடன் சண்டையிட ஆரம்பித்தனர் . மகன்கள் மற்றும் அவர்களது தந்தை இருவரும் பூசாரியை கொடூரமாக தாக்கினர்.
மேலும் பூசாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.இதனை தொடர்ந்து சாந்தன் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது தொடர்பாக பூசாரி போலீஸில் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து பூசாரியை தாக்கியவர்களை விசாரித்தபோது, திருமணப் பொருத்தம் தொடர்பாக பூஜை நடத்துவதற்கு பூசாரியை அழைத்ததாகவும், பூசாரி பூஜையை தவறுதலாக நடத்தியதால் ஆத்திரத்தில் தாக்கியதாகவும் லட்சுமிகாந்த் ஷர்மாவும் அவர்கள் மகன்களும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதைதொடர்ந்து ,குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்