ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் சீமா பத்ரா.
இவர் தனது ராஞ்சியில் உள்ள இல்லத்தில் வைத்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர்.
பின்னர், டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலை செய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார். வத்சலா டெல்லியில் இருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமாவின் வீட்டில் பணிபுரிந்தார். இந்நிலையில், சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்.
பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதை பற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பாஜக தலைவரின் அசோக் நகர் இல்லத்தில் இருந்து ராஞ்சி போலீசார் அவரை மீட்டனர். சீமாவின் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை சுனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு தனது பற்களை இரும்பு கம்பியால் உடைத்ததாகவும், சூடான பாத்திரங்களால் உடம்பில் எரித்ததாகவும், சிறுநீரை நக்க வைத்தனர், தன் நாக்கைப் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார். எனக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன்.
ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை தன் தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன் என கூறினார். இந்த நிலையில் தனது வீட்டுப் பணியாளரை கொடூரமாக தாக்கிய ஜார்க்கண்ட் பா.ஜனதா தலைவர் சீமா பத்ரா இன்று காலை கைது செய்யப்பட்டார்.
NCW தலைவர் ரேகா ஷர்மா விடுத்துள்ள அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யுமாறு ஜார்கண்ட் காவல்துறை தலைமை இயக்குநருக்கு குழு கடிதம் எழுதியுள்ளது என்றார்.
யாராக இருந்தாலும், நமது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களைச் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நடத்தையை பா.ஜனதா பொருத்து கொள்ளாது என கூறினார்.மேலும் “இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் காலவரையறையான விசாரணைக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது” என்று ரேகா சர்மா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை ஆணையம் நாடியுள்ளது மற்றும் அவரது பாதுகாப்பான மறுவாழ்வை உறுதி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏழு நாட்களுக்குள் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும்.