11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
இவர்களில் 3,89,736 பேர் மாணவர்கள். 4,30,471 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 5000 பேரும் எழுதினர். பிளஸ் 1 தேர்வுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 154 கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களே .. 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு – மே 16 முதல் விண்ணப்பம்!
முன்னதாக செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் … மார்ச் – 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது.
இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9.40 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.