கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியமிில்லை என்று சட்டதுரை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவிதுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்துக்கு முன்பாகவே அதிமுகவினர் கள்ளச் சாராய சம்பவத்துக்கு நீதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து , சட்டசபை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;கள்ளக்குறிச்சியில் மெத்தனாயில் ரசாயனத்தை குடித்ததனால் 52 பேர் உயிரிழந்தது வருந்ததக்க செயல். விரும்பத் தகாத செயல் இதை யார் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த விவகாரத்தை கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவையில், 40க்கு 40 தொகுதிகளில் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்கள் மத்தியில் தோல்வியை கண்டு விட்டோம்,
சட்டப்பேரவையில் ஏதாவது ஒரு பிரச்சனையை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ந்து சட்டப்பேரவையை முடக்கம் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் முதல்வர் பேச வாய்ப்பு தரவில்லை என எடப்பாடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும். முன்னதாக அவையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பிறகு முதலமைச்சர் அவர்களை மீண்டும் அழைத்து தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.
பொதுவாக கேள்வி நேரத்தின் போது யாரும் விவாதிக்க அனுமதி இல்லை. ஜிரோ அவர் போது தான் பிரச்சனையை விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்.ஆனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி நேரத்தில் அமளியில் ஈடுப்பட்டு ,சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
மேலும் அந்த நேரத்தத்தில் சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம் என கூறியிருந்தாரே தவிர , வாய்ப்பு மறுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
தங்கள் தோல்வியை மறைக்க பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்கள் புறக்கணித்ததால் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என காத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகரத்தில் தி.மு.க. அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை.” என தெரிவித்தார்.