நடுவானில் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு சென்னையில் அவசரமாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தாரில் இருந்து இந்தோனேஷியாவிற்கு, 368 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கத்தார் ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்ட நிலையில் நடுவானில் ஏற்பட்ட திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்து விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். மேலும் விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர்தப்பினர்
விமானத்தில் கோளாறு சரி செய்யட்டு, 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.