சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட தொல்.திருமாவளவனுக்கும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கும் ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/image-160.png?resize=700%2C394&ssl=1)
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் 11 நாள் தேர்தல் பிரசாரம்!!
இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல்நிலவரம் குறித்து இரு கட்சி தலைவர்களும் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மேலும் இவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.