சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 37 வயதுடைய விக்னேஸ்வரன் என்ற நபர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருடன் இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளார் (OYO).
ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் விக்னேஸ்வரனை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால், காதல் கோட்டை படத்தில் வருவது போல முகத்தை பார்க்காமல்,
முகவரியும் தெரியாமல் அந்த இளம் பெண்ணின் இனிப்பான பேச்சை நம்பி காதல் வலையில் சிக்கினார் விக்னேஸ்வரன்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரும் செல்போனிலும், இணையதளம் வாயிலாகவும் தங்கள் காதலை மேலும் வளர்த்து வந்தார்கள்.
Live-In Relationship : உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!
போலியான ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு அந்த பெண் விக்னேஸ்வரனை தனது உல்லாச வலையில் விழ வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (07.01.24) காலை அந்த இளம்பெண் விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு, தான் வீட்டில் தான் தனியாக இருப்பதாகவும் (OYO),
நேரில் வந்தால் உங்களுக்கு இன்ப விருந்து கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதைனை உண்மை என்று நம்பிய விக்னேஸ்வரனும் அந்த இளம்பெண் கூறிய முகவரியான எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த இளம்பெண் கொடுத்த முகவரியில் இருந்த வீட்டில் அந்த பெண்ணோடு 2 ஆசாமிகளும் இருந்துள்ளனர்.
அவர்கள் விக்னேஸ்வரன் உள்ளே சென்றதும் அவரை அடித்து உதைத்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர்.
அவரது வங்கி கணக்கில் இருந்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு, அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்தனர்.
அதோடு விடாமல் மேலும் ரூ.15 ஆயிரம் வேண்டும் என்று கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதனால் விக்னேஸ்வரன் வீட்டுக்கு சென்றவுடன் அந்த பணத்தை ‘கூகுள் பே’ மூலம் அனுப்புவதாக கூறியுள்ளார்.
அதை நம்பி அந்த கொள்ளை கும்பல் விக்னேஸ்வரனை விடுவித்தனர். ஆனால் அவர் நேரடியாக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்துக்கு சென்று, அவருக்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக காவல் படையினர் குறிப்பிட்ட அந்த வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு இருந்த இளம்பெண்ணையும், அவருடன் இருந்த ஏழுமலை மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை மடக்கி பிடித்த போலீசார், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விக்னேஸ்வரனிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி சங்கிலி மீட்கப்பட்ட நிலையில், இளம்பெண் உள்பட 3 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளம்பெண் இதேபோல் ஏராளமான இளைஞர்களிடம் காதல் நாடகமாடி தனது உல்லாச வலையில் விழ வைத்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.