பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ( pa chithambaram ) கேள்வி எழுப்பியுள்ளார் .
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது :
வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டது தான் இந்த பாஜக தேர்தல் அறிக்கை . மக்களுக்கு நலன் தரும் எந்த ஒரு நல்ல வாக்குறுதிகளும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை .
சாதிவாரி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினால் தான் உண்மையைக் கண்டறிய முடியும். 4 கோடி இலவச வீடுகள் கட்டியதாகவும், 3 கோடி வீடுகள் கட்டப் போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஒருமாவட்டத்துக்கு சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும்.
Also Read :https://itamiltv.com/edappadi-palaniswami-election-campaign-at-dharmapuri/
கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது என பாஜக கூறுகிறது.ஆனால்கடந்த 9 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் ரூ.10 லட்சத்து 41 யிரத்து 974 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நாடு; ஒரு தேர்தல்,பொது சிவில் சட்டம் இவை பேராபத்துகள். மக்களை பிளவுபடுத்தி, சர்வாதிகார பாதைக்கு அழைத்துசெல்லும்.
கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல்எல்லோரும் பேசினார்கள். ஆனால்,தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?
10 ஆண்டாக அரைத்த மாவையேதேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். ( pa chithambaram ) அதைமக்கள் நிராகரிப்பார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.