திமுக ஆட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடி வருவதாக ( EPS VS DMK ) தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார் .
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தற்போது களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் எனக்கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவையில்லை; மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்பியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக இறங்கி நம்மைப் பற்றி பொய் பரப்புரை செய்கிறது
சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து பாஜக நம்மை சீண்டுகிறது;அதிமுகவின் ஆற்றலும், தொண்டர் பலத்தையும் பற்றி பாஜகவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் .
Also Read : https://itamiltv.com/pa-chidambaram-criticism-of-bjps-election-manifesto/
அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது; திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது.
திமுக ஆட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது . ( EPS VS DMK ) இண்டியா கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது; ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்…..