இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட வாடிக்கையாளர் ஒருவர் 2000 ரூபாய் நோட்டு கொடுத்ததால், 2000 நோட்டை வாங்க மறுத்து பெற்றோரை மீண்டும் உறிஞ்சி எடுத்த சம்பவம் பெரம்பூரில் நிகழ்ந்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப்பெறப்படும் என்றும், வைப்புத்தொகை மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2000 ரூ நோட்டுகள் செல்லும் என்பதால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றியும் வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வந்த வாடிக்கையாளர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்திற்கு 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பெட்ரோல் நிரப்பி விட்டு வாடிக்கையாளரிடம் 2 ஆயிரம் ரூபாய்த் தாளை வாங்கிய ஊழியர், பெட்ரோல்பங்கு சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது எனக் கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு வாடிக்கையாளர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல்பங்க் பெண் சூப்பர்வைசர், வாகனத்தில் இருந்து பெட்ரோலை மீண்டும் எடுக்கக் கூறி உள்ளார்.
அதன்படி பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் உறிஞ்சு குழாயைப் பயன்படுத்தி பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்துள்ளார் அந்த ஊழியர். இதனை அங்கு இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவளைத்தலங்களில் வைரலாகி வருகிறது.