உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோவிலில் பிரதமர் மோடி(modi )வழிபாடு நடத்தினார்.தற்பொழுது அதன் புகை படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு, பிரதமர்(modi) மோடி மத்திய பிரதேசத்துக்கு நேற்று சென்றார்.
அங்குள்ள உஜ்ஜைனி(Ujjain) மகா காலேஸ்வரர் கோயிலுக்கு சென்ற அவர், மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
உஜ்ஜயினியில் மகாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி(modi) இன்று மாலை தொடங்கி வைத்தார்.
உஜ்ஜயினியில் மகாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார்.
850 கோடி மதிப்பிலான மஹாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டம், கோயிலுக்கு வருபவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதோடு, தடையற்ற, உன்னதமான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும்.
இது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் மக்கள் இணைக்க உதவும் என்று தெரிவித்தார்.