கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே Poonam Pandey பணம் ஈட்டும் நோக்கத்தால் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், அந்த படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பே என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், தற்போது ஆபாச படங்களில் வருமானம் பார்க்க முடியாமல் போன நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான லாக்கப் எனும் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதிலும் திருப்தி அடையாத அவர் மேலும், சம்பாதிக்க வேண்டும் என கர்ப்பவாய் புற்றுநோய் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொண்டார் என பாலிவுட்டின் உமைர் சந்து தற்போது உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
இதையும் படிங்க : உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழல்? – ராமதாஸ் கண்டனம்!
தான் இறந்து விட்டதாக நாடகத்தை நடத்தி நாடு முழுவதும் தன்னை பற்றி பேச வைத்துள்ளார். அவரது உண்மையான முகத்திரை தற்போது கிழிந்து விட்டது எனவும் உமைர் சந்து கூறியுள்ளார்.
முன்னதாக, கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக பூனம் பாண்டே தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் பல பெண்கள் உயிரிழந்து வருகின்றனர்.
ஆனால், எனக்கு அதெல்லாம் இல்லை. நான் மரணிக்கவும் இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படி நாடகம் போட்டேன்.
எல்லாரும் பெரிய மனது பண்ணி என்னை மன்னித்து விடுங்கள் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
நேற்று பூனம் நிஜமாகவே உயிரிழந்துவிட்டார் என நினைத்து பாலிவுட் நடிகர்கள் மற்றும் பூனம் பாண்டேவின் உறவினர்கள் பலரும்,
அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போது, பூனம் பாண்டே அறிவிறுத்தலின் பேரில் அவர்கள் வாயே திறக்காமல் இருந்து விட்டனர்.
இதனால், உறவினர்களே பூனம் பாண்டே மற்றும் அவர் குடும்பத்தினர் மீது அனைவரும் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
இதனிடையே, பாலிவுட் நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி விமர்சனம் போட்டு வாங்கிக் கட்டி வரும் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில்,
“நேற்று இரவே பூனம் பாண்டே இறக்கவில்லை என நான் சொல்லியிருந்தேன். ஆனால், யாரும் நம்பவில்லை. இப்போ அவர் வீடியோ போட்டுள்ளார்.
இது விழிப்புணர்வுக்காக இல்லை. இதன் மூலம் 25 லட்சம் ரூபாய் அவர் சம்பாதித்து இருக்கிறார். அதற்கான டிராமா தான் இது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இதற்கான பின்விளைவுகளை பூனம் பாண்டே Poonam Pandey சீக்கிரமே அனுபவிப்பார்” என்றும் கூறியுள்ளார்.