Port projects | பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ளார். இந்த பயணத்தில் அரசியல் மற்றும் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
அந்த வகையில் ,தூத்துக்குடி மாவட்டத்தில் 7,056 கோடி செலவில் வஉசி சிதம்பரனார் துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது.இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக வெளி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில் பெட்டி முனையத்தை கட்டுவதற்கான உலகளாவிய ஏலத்தை வஉசி துறைமுகம் கோரியுள்ளது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28) பிரதமர் நரேந்திர மோடி சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிப்புறத் துறைமுகத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிரா மாநிலம் வாதவன் துறைமுகத் திட்டத்துக்கு அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது.
இதையும் படிங்க: Dmdk |திசை மாறுகிறதா தேமுதிக..? ‘பணால்’ ஆன பிரேமலதா ஃபார்முலா..!
இந்த துறைமுகம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.
துறைமுகத்தின் மொத்த சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துறைமுகம்(Port projects) கரைக்கு அருகில் சுமார் 20 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது. இது 16,000-25,000 TEUs திறன் கொண்ட பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762725754973110556?s=20
பின்னர் பேசிய அவர் திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. இந்த திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நான் உங்களின் கோரிக்கைகளை, விருப்பங்களை நிறைவேற்றுகிறேன்.
மேலும் மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சாலை கட்டமைப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வஉசி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.