Arrest-கோவையில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் கைது:
உத்திரபிரசேத மாநிலம் அயோத்தியில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் 5 வயது குழந்தையான பால ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த ராமர் சிலையை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். மேலும் இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பொள்ளாச்சியை சேர்ந்த திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜ் கருத்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று குமரன்நகர் செல்லும் வழியில் உள்ள தென்றல் செல்வராஜ் வீட்டு முன்பு பொள்ளாச்சி நகர பாஜ தலைவர் பரமகுரு தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பாஜக கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமகுரு, கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி திருமதி. சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க :http://Rahul Gandhi-அமித் ஷாவுக்கு, கார்கே திடீர் கடிதம்.!
இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, நாட்டின் பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பல நூறு ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய,
வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த,
பொள்ளாச்சி திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பிய கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமகுரு மற்றும் கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி திருமதி.
சாந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளைக் கைது செய்திருக்கிறது. பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு உரிமைகளையும்,
இந்து மத நம்பிக்கையையும் புண்படுத்திய திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750040714858340707?s=20
வேங்கைவயல் குற்றவாளிகளையோ, வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரையோ கைது செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் சீர்குலைந்து இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஆனால், பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய திமுகவினரை எதிர்த்து, மக்களின் குரலாகப் போராடிய பாஜகவினரைக் கைது செய்வதில் மட்டும் அவசரம் காட்டுகிறது திமுக அரசு.
ஆன்மீக பூமியான தமிழகத்தில், பொதுமக்களின் இறைநம்பிக்கையைத் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு, எளிதில் தப்பித்து விடலாம்,
எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில் இன்னும் திமுக இருந்தால், அதை மாற்றிக் கொள்வது அவர்களுக்கு நல்லது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.