கடலூர்நாடாளுமன்றம் தொகுதியில் என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இயக்குனர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் , கடலூர் தொகுதியில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட தங்கர் பச்சான் சினிமா துறையில் இருந்து அரசியலில் தடம் பதித்துள்ளார். பாமகவில் இணைந்த இவர் பாஜக கூட்டணியில் தங்கர்பச்சான் ,காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத், தேமுதிக கட்சி சார்பில் களமிறக்கப்பட்டனர்.
அதில், காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் 455,053 வெற்றி பெற்றார். மேலும் எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளராக தங்கர்பச்சான் 205,244 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
வாக்குப்பதிவு : கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 746 வாக்காளர்கள் உள்ள நிலையில், இம்முறை 2024 தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 298 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 72.57 சதவீதமாகும்.
இந்த நிலையில், கடலூர்நாடாளுமன்றம் தொகுதியில் என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இயக்குனர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : வணக்கம் எழுத்துக்கள், பேச்சுக்கள், திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கான அரசியலை பேசிக் கொண்டிருந்த எனக்கு தேர்தல் கள அரசியலில் செயலாற்றுவற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த சமூக நீதிப் போராளி மருத்துவர் திரு #இராமதாஸ் ஐயா அவர்களுக்கும்,திரு #அன்புமணிஇராமதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்…
இதையும் படிங்க: பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்தவர் கைது!!
அதேபோல் #கடலூர்நாடாளுமன்றம் தொகுதியில் பதிவான வாக்குகளில் 20% வாக்குகளான 205244 வாக்குகளை என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும்,அதற்கு உறுதுணையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும்,அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் பெரு நன்றியினை உரித்தாக்குகிறேன்.
என்னை வளர்த்தெடுத்த இம்மக்களுக்காக தொடர்ந்து என் அரசியல் குரலும், செயல்பாடுகளும், படைப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்.நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.