அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : 20 வயது இளைஞரின் உயிரை பறித்த போதை ஊசி – கதறும் காதல் மனைவி..!!
கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் தன் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றும், தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் தான் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்தேன் எனவும் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.