சென்னையில் கோடை மழைக்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய ( no rain ) தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசந்திரன் கூறியதாவது :
தமிழ்நாட்டில் வட உள்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு 3-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்; தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.
உள் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 7-ஆம் தேதி கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Also Read : நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த உதகையில் இன்று 20 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது
கிருஷ்ணகிரியில் ஓசூர், பேரிகை பாகலூர், சூளகிரி உத்தனப்பள்ளி பகுதியில் ( no rain ) மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலை ஏற்பட்டது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.