ஊரடங்கின்போது திருமண நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி..!

நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு என தெரிவிக்கபட்டுள்ளது.

திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை பொதுமக்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.திருமண மண்டபத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts