வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 500 சிறப்புப் பேருந்துகள் (500 special buses) இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரது துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைக்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் தங்கி அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் .
இதனை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எந்தவித தொய்வும் இன்றி பயணம் செய்ய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் (500 special buses) கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது .
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும்
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பிப்.9-ம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார விடுமுறையில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,429 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதிக்காக
Also Read : https://itamiltv.com/former-prime-ministers-bharat-ratna-award-announcement/
சிறப்பு பேருந்துகள் போதுமான அளவு கொடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தாராளமாக பயணம் மேற்கொள்ளலாம்.
எனவே பயணிகள் அனைவரும் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மகிச்சியுடன் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.