இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், சென்னையில் 1 கிலோ தக்காளி விலை 130 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதுமட்டுமல்லாமல், தக்காளியோடு சேர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும், மளிகைப் பொருட்களின் விளையும், கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளதாலும் அத்துடன், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் சென்னை கோயம்பேட்டில் சில்லறை விற்பனையில் நேற்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதையடுத்து, இன்று சற்று விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பச்சை மிளகாய் ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இஞ்சி 260 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் சின்ன வெங்காயம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் கிலோ 130 ரூபாய்க்கும், முட்டை கோஸ் 20 ரூபாய்க்கும், வெண்டை 40 ரூபாய்க்கும், உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பப்படுகிறது.