சைவ வழிபாட்டிற்குரிய சிவபெருமானுக்கு, இந்தியா மட்டுமின்றி, உலகம் உயரமான முழுவதும் வழிப்பாட்டு தளங்கள் இருக்கின்றனர். அவற்றில் சில உயரமான சிலைகளுடன் அமைந்த ஆலயங்களாகவும் காணப்படுகின்றனர். அப்படி இந்தியாவில் அமைந்த வித்தியாசமான சில ஆலயங்களைப் பார்க்கலாம்.
ஆதியோகி சிலை:
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈசா போக மையத்தில் அமைந்துள்ளது, ஆதியோகி சிலை.
இந்த சிலை தியானத்திற்காடா சிவனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மார்பளவு கொண்ட இந்த சிவன் சிலை 112 அடி உயரத்துடன் அமைந்துள்ளது.
மேலும் 147 அடி நீளமும், 82 அடி அகலமும் கொண்டது. இந்த சிலை, மார்பளவு சிலைகளில் மிகவும் உயரமானது என்ற சாதனையை படைத்திருக்கிறது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட இந்த சிலையின் முன் பாக, ஆண்டு தோறும் மகா சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
சர்வேஸ்வர் மகாதேவ்:
குஜராத் மாநிலம் வதோதராவில், புகழ்பெற்ற சுரசகார் ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது. சர்வேஸ்வர் மகாதேவ் சிலை ஏரியில் 23 தூண்களு டன் அமைந்த மண்டபம் கட்டப்பட்டு,
அதன் மேல் பீடம் வைக்கப்பட்டுள்ளது. அந்த பீடத்தின் மீது நின்ற கோலத்தில் சிவபெருமான் வலது கரத்தில் அபய கப்பிடித்தபடி காட்சியளிக் சுர்சாகர் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் சிவபெருமான் முத்திரை காட்டியும், இடது கரத்தில் திரிசூலத்தைப் பிடித்தபடியும் கக்காட்சியலிக்கிறார்.
இந்த சிலையானது, 111 அடி உயரம் என்று கணக்கிடப்பட் 1 அடி உயரம் கொண்டது. பீடத்துடன் சேர்த்து 120 அடி உயரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு தொடங் ப்பட்ட இதன் கட்டுமானப் பணி 6 ஆண்டுகள் நடைபெற்று, 2002-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சிலைக்கு ரூ.12 கோடி மதிப்பில், 17.5 கிலோ தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருக்கிறது.
நம்பிக்கையின் சிலை:
ராஜஸ்தான் மாநிலம் நாததுவாரா என்ற இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா, கார் நிறுத்தும் வசதிகளுடன் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, ‘நம்பிக்கையின் சிலை’ என்று அழைக்கப்படும் சிவன் சிலை.
இந்த சிலையானது, சிறிய குன்றின் மீது சிவபெருமான் அமர்ந்திருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடக்கி, வலது காலின் மீது போட்டு தோரணையுடன் அமர்ந்திருக்கிறார், இந்த சிவன்.
அவருக்கு அருகில் திரிசூலமும் உள்ளது. குன்றின் அடிவாரத்தில் இருந்து சிவபெரு மானை நெருங்கிச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த படிக்கட்டுகளின் பாதி வழியில் சிவபெருமானை நோக்கியபடி நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் சிலையானது 369 அடி உயரம் கொண்டது.
இதன் பீடம் மட்டும் 110 அடி உயரமா கும். இந்த சிலையை நாததுவார நகரின் 20 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க இயலும்.
சிலையின் அடிப்பகுதியில் பீடம் உள்ள இடத்தில் சிறிய கோவிலும் உள்ளது. இதில் 25 அடி உயரம், 37 அடி நீளத்தில் ஒரு நந்தியும், சிவபெருமானின் பெருமைகளை உணர்த் தும் சிற்பங்களும் அருங் காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளது.
சிவகிரி சிவன்:
கர்நாடக மாநிலம் பிஜப்பூர் நகரில் சிந்தகி சாலையில் அமைந்திருக்கிறது சிவகிரி சிவன் என்ற சிவன் சிலை .
85 அடி உயரத்தில் பத்மாசனத்தில் ஆணர்ந்தபடி சின் முத்திரையுடன் தியான நிலையில் அமர்ந்து இருக்கிறார்.
மேலும் இந்த சிலை கம்பீரமான தோற்றத்தில் காட்சியாளிக்கிறார். இந்த சிலை வடிவமைக்கபட்ட 13 மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
1500 டன் எடை கொண்ட இந்த சிலை சீமைகாரை மற்றும் இரும்பு கொண்டு கத்தபட்டு இருக்கறது. மேலும் கோவிலின் அடிபகுதியில் கோவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் சிவபெருமானின் தொன்மையை எடுத்துரைக்கும் சித்திரங்கள் சிற்பங்களும் வடிவைக்கபட்டது.