Shivraj Singh Chouhan :அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை காங்கிரஸ் புறக்கணித்துள்ளதற்கு மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,“ராமர் நமது கடவுள். அவர் பாரதத்தின் ஆன்மாவாக, அடையாளமாக திகழ்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை ஏற்க மறுப்பது இந்தியாவின் கலாச்சாரத்தை, அடையாளத்தை நிராகரிக்கும் செயலாகும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,இது போன்ற செயல்களால் தான் காங்கிரஸ் கட்சி தற்போது விளிம்புநிலையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் ,உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புறக்கணித்த காங்கிரஸ் :
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், பிஹார் முதல்வர்நிதிஷ் குமார்,
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா,
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745330640445444309?s=20
மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆகியோர் கலந்து கொள்ள மாட்டர்கள் என அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில்,ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில்,
ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தது
ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை காங்கிரஸ் புறக்கணித்துள்ளதற்கு ம.பி. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan) கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.