உத்தர பிரதேச மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் வீட்டில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரசேத மாநிலத்தில்,மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக கவுஷல் கிஷோர் இருந்து வருகிறார். லக்னோ பர்காரிய என்ற கிராமத்தில் அமைந்துள்ள இவரது வீட்டில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாகூர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைகைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கியை போலீசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் ஸ்ரீவஸ்தவான் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இந்த கொலை சம்பவம் அதிகாலை 4.15 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.போலீசார் கைப்பற்றிய துப்பாக்கி மத்திய அமைச்சர் மகன் விகாஸ் கிஷோரின்உடையது என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது பற்றி அவர் கூறுகையில் போலீசார் கைப்பற்றிய துப்பாக்கி எனது மகன் விகாஸ் உடையது.ஆனால் சம்பவம் நடந்த போது விகாஸ் கிஷோர் வீட்டில் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் சம்பவம் நடந்த போது அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்களை போலீசார் கைது செய்ததை தன் மகனிடம் சொல்லிய போது விகாஸ் மிகவும் வருத்தமடைந்தாக தெரிவித்த அவர்,இறந்த வினய் என் மகனுக்கு மிகவும் நல்ல நண்பர், ”என்று அமைச்சர் மேலும் கூறினார்.