வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் வயநாடு மற்றும் அதனை சுற்றி இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
Also Read : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பள்ளியை சூறையாடிய பெற்றோர்..!!
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் 400கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . மேலும் இந்த துயர சம்பவத்தில் உறவுகளை , வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் இருந்து வயநாடு மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்த நேரத்தில் பேரளவிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு குறித்து பதறவைக்கும் தகவலை தற்போது கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
மீளா துயரத்தில் ஆலித்திய இந்த வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தேவைக்கும் இந்த நேரத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்துள்ளது மேலும் வேதனையை தருவதாக கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.