இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் மருத்துவப் படிப்புகளுக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மருத்துவத்துறை மாணவன் நவீன் சேகரப்பாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைனை தன்னோடு இணைத்துக்கொள்ள முடிவு செய்த ரஷ்யா கடந்த மாதம் 24 தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப்படைகள் உக்கிரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு உக்கரைன் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டதோடு பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து உக்கிரனில் சிக்கித்தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை பல்வேறு உலக நாடுகளும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அந்த வகையில் உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் இந்திய மருத்துவத்துறை மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை இந்திய அரசு மீட்கும் பணியில் ஈடுபட்டது.
இதற்கிடையில் உக்ரைன் போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்தார். உக்ரைனில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் உடல் மார்ச் 21-ம் தேதி பெங்களூரு வந்தடையவுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து வரும் கர்நாடகா மாணவன் நவீன் சேகரப்பாவின் உடல், மருத்துவ படிப்புக்கு தானமாக வழங்கப்படும் அவரது தந்தை பேட்டி அளித்துள்ளார்.
அதில் உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர் நவீனில் உடல் உக்ரைனில் இருந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூரு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதாக என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் தமது மகனின் உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன் பின்னர், மருத்துவப் படிப்புக்காக தனது மகன் உடலை தாவணகெரேவில் உள்ள எஸ்.எஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவனின் தந்தை கூறியுள்ளார்.