தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்தும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்தும் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார் .
தமிழ்நாடு சட்டப்பேரவை யை நடக்க விடாமல் அவைக்கு குந்தகம் அளித்ததாக கூறி சபாநாயகர் அப்பாவு அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் .
இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிக்காததை கண்டித்தும், நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை கண்டித்தும் அதிமுகவினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக எம்எல்ஏக்களை, நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.