Ambati Rayudu :இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு. இவருக்கு வயது 38.இடது கை ஆட்டக்காரான இவர்.
ஜூலை 2019 இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார்.
முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2018-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
also read :https://itamiltv.com/maldives-envoy-summoned-amid-row-over-ministers-remarks-against-pm-modi/
சமீபத்தில் நடந்து முடிந்த 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் ஐபிஎல்லிருந்தும் ஓய்வுபெற்றார்.
அவர் இந்தியாவுக்காக 55 போட்டிகளில் 47.05 சராசரியில் மொத்தம் 1694 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த ஆட்டம் 124 ரன்கள் ஆகும்
இந்த நிலையில் கடந்த டிச. 28ல் திடீர் திருப்பமாகஅம்பதி ராயுடு(Ambati Rayudu) ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து அம்பத்தி ராயுடு, தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியில்இருந்து விலகுவதாக இன்று (ஜன.6) அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
also read :https://x.com/RayuduAmbati/status/1743947682186706960?s=20
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு…
நான் அம்பதி ராயுடு(Ambati Rayudu), துபாயில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடவுள்ளேன்.
எனது தொழிலான கிரிக்கெட் விளையாட்டை விளையாடும் போது, நான் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
அதனாலயே அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்குகிறேன்” எனக்கூறியுள்ளார்.
மேலும் ,இந்திய அணியிலிருந்து திடீரென விலகியது, ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகல் முடிவை எடுத்தது போன்ற வரிசையில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார் அம்பத்தி ராயுடு.
எதற்காக கட்சியிலிருந்து விலகினார், அடுத்ததாக வேறு கட்சியில் ஏதும் இணையப் போகிறாரா என்கிற விபரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.