ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி, இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டம் நடைபெற்றது. பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேசம் அணி இந்திய அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்திய அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் அணி வீழ்த்தி உள்ளது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், பிரசித், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
கொழும்புவில் நாளை நடைபெறும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதவுள்ளன.