பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம் (BB 5 Abhirami). இவரின் Deep Fake வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
AI தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக போலிகளை உருவாக்க முடியும். முதன் முதலில் இதனை வைத்து சினிமா பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி சமூக வலைத் தளங்களில் வைரலாக்கினர்.
அதன் பின்னர் வயதான நடிகர்களை எல்லாம் குழந்தை தோற்றத்தில் மாற்றி காட்டி வைரலாக்கினர்.
அதுமட்டுமல்லாமல் தற்போது கூட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரல்களை AI உதவியுடன்
‘லால் சலாம்’ படத்தில் இடம்பெறும் திமிறி எழுடா என்கிற பாடலுக்காக மீண்டும் கொண்டுவந்து தனது இசையில் பயன்படுத்தி உள்ளார்.
அதேபோல் மலையாளத்தில் ஒரு படத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் மம்முட்டியை 30 வயது இளைஞர் தோற்றத்தில் காட்ட உள்ளனர். இப்படி AI மூலம் சினிமா உலகில் மாயங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆனால் அதேவேளை மற்றொருபுறம் இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கி அதனை இணையத்தில் பரப்பிவிடுகின்றனர்.
முன்னதாக நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் என பாலிவுட் நடிகைகளை வைத்து தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு அதனை வைரலாக்கினர்.
அந்தவகையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் நிர்வாண வீடியோ எனக்கூறி டீப் ஃபேக் வீடியோ ஒன்றை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : Bigotry : மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம் – வைகோ அழைப்பு!
அந்த வீடியோ அபிராமியின் கவனத்துக்கு சென்றதை அடுத்து அவர் இதுகுறித்து நீண்ட பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் (BB 5 Abhirami).
அதில் அவர் கூறியிருப்பதாவது : “என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒன்று நடக்ககூடாது. சமீபகாலமாக டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
இதன்மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம் என்பது பயமுறுத்துகிறது.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இதை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி.
இதையும் படிங்க : குரூப்-4 போட்டித் தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் தக்க பாடத்தை கற்றுக்கொடுக்கும். நான் தைரியமான பெண், எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது.
தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது.
பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என தெரியவில்லை. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் இதுபோன்ற மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.