Chennai – Tiruvannamalai Special Train : இன்று (02.05.24) முதல் சென்னை கடற்கரை – வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் பாஸ்ட் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.
இந்த மின்சார ரெயில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரெயிலை,சென்னையில் தினமும் வேலைக்கு சென்று வர மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது பாஸ்ட் மின்சார ரெயில் என்பதால் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
![Chennai - Tiruvannamalai Special Train](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/image-18.png?resize=472%2C231&ssl=1)
இந்த நிலையில், தெற்கு ரெயில்வே பொதுமக்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதாவது, பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை – வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் (06033/06034) மே 2-ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி சென்னை – திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (06033) சென்னை கடற்கரையில் இருந்து இன்று (02.05.2024) மாலை 6 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும்.
அதே போல திருவண்ணாமலை – சென்னை செல்லும் சிறப்பு ரெயில் (06034) திருவண்ணாமலையில் இருந்து நாளை (03.05.2024) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது Chennai – Tiruvannamalai Special Train.
இதையும் படிங்க : தஞ்சை பெரிய கோயில் தொடர்பாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை – அறநிலையத்துறை