2,222 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்!!

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும். இந்த பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.

மொத்தம் 2222 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவை துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 23 பணியிடங்களும், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 16 பணியிடலங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 2171 பணியிடங்களும் காலியாக உள்ளன.

மேலும், பாட வாரியாகவும் காலிப் பணியிங்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 என மொத்தம் 2222 காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு இன்று 01-11-2023 முதல் 30-11-2023 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்: 07-01-2024

Total
0
Shares
Related Posts